தமிழகத்தில் ஒருதுளி போதைப்பொருள்கூட இருக்கக்கூடாது: பழனிசாமி வலியுறுத்து

சென்னை: ஒருதுளி போதைப்பொருள்கூட தமிழகத்தில் விற்பனை ஆகாமல் தடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் தமிழக ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி, தமிழகத்தை போதைப்பொருள்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே அதிமுகவின் நோக்கம் என்றார்.

போதைப்பொருள்கள் மூலமாக வந்த பணத்தைக் கொண்டுதான் திமுக எதிர்வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்க இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருப்பதாக பழனிசாமி சாடினார்.

“தமிழகம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு திமுகதான் காரணம். எனவே, இதற்குத் தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் அமைச்சர் உதயநிதி ஆகியோர் பதவியில் இருந்து விலக வேண்டும். இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்,” என்றார் பழனிசாமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!