சென்னை: சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்து உள்ளதால் இல்லத்தரசிகள், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கவலையடைந்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்காக காய்கறிகள் கொண்டு வரப்படும். அவற்றில், தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலையில் பெரிய மாற்றம் இல்லை.
அதேநேரத்தில் கேரட், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.
கடந்த வாரங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.20க்கு விற்கப்பட்ட நிலையில், இப்போது ரூ.20 உயர்ந்து ரூ.40க்கு விற்கப்படுகிறது.
குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் ஒரு சுரைக்காய் 20 ரூபாய்க்கும் அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.