மின்னூட்டிகளில் தங்கம் கடத்திய ஆடவர் கைது

மதுரை: மின்னூட்டிகளில் (சார்ஜர்) மறைத்து வைத்து கடத்தப்பட்ட தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.6.60 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

துபாயில் இருந்து மதுரைக்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மதுரை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

அனைத்துப் பயணிகளின் உடைமைகளும் சோதனையிடப்பட்ட நிலையில், ராமேசுவரத்தைச் சேர்ந்த ஆனந்த் (40 வயது) என்ற ஆடவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

கைப்பேசி மின்னூட்டிகளில் தங்கத்தை மறைத்து வைத்து அவர் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

தேவிப்பட்டனம் பகுதியைச் சேர்ந்த அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!