இந்திரா காந்தி கல்லூரியில் மரத்தடி காந்திச் சிலை திறப்பு

திருச்சி: கடந்த 1934ஆம் ஆண்டில் திருச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார் மகாத்மா காந்தி.

திருச்சியில் உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் அந்த மரம் அமைந்துள்ளது.

மகாத்மா காந்தி வந்து சென்றதன் நினைவாக அம்மரத்தடியில் தற்போது காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அச்சிலையின் திறப்பு விழா இந்திரா காந்தி கல்லூரியில் நடைபெற்றது. அதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்தார்.

இந்தச் சிலையை எம்.எஸ். நாகப்பா ஸ்கல்ப்டர்ஸ் 1911 என்ற நிறுவனத்தின் சிற்பி கிஷோர் நாகப்பா வடிவமைத்துள்ளார்.

சிலைத் திறப்பு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக அளவில் பொருளாதார ரீதியில் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஐந்தாம் இடத்துக்கு முன்னேறி உள்ளதாகக் குறிப்பிட்டார். அடுத்த இரு ஆண்டுகளில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!