18 கிலோ தங்கம், 100 கிலோ வெள்ளி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.5 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடந்த சோதனையின்போது இரண்டு பிரபல நகைக்கடைகளுக்குச் சொந்தமான 18 கிலோ தங்கம், 100 கிலோ வெள்ளி பொருள்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

திங்கட்கிழமை நள்ளிரவில் காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது நகைகளுடன் வந்த இரு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

அவற்றை சோதனையிட்டபோது தங்க நகைகளும் வெள்ளி பொருள்களும் கிலோ கணக்கில் இருப்பது தெரிய வந்தது. வாகனங்களில் வந்தவர்கள் உரிய ஆவணங்களைக் காண்பிக்க தவறியதால் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா, பரிசு பொருள்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அக்குழுவினர் மாநிலம் முழுவதும் பரவலாக சோதனைச் சாவடிகளை நிறுவி பண நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!