கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி விழுந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் கோகிலா (வயது 50). இவர், கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகள் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.
மார்ச் 16ஆம் தேதி அதே பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுவன் ஒருவன் இடைவேளை நேரத்தில் கழிவறைக்குச் சென்றபோது அவனை பின் தொடர்ந்து கழிவறைக்குள் சென்ற கோகிலா, அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து கோகிலா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.