சென்னை: மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக வெயிலின் கடுமை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் திடீரெனப் பெய்த கோடை மழை மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
நெல்லை, மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி. ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.