திமுக கூட்டணியை பலப்படுத்துவதே எங்கள் நோக்கம்: கமல்ஹாசன்

சென்னை: ஒரு சக்தி மக்களை பிளவுபடுத்த நினைக்கும்போது அதற்கு எதிராக நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் சமய அடிப்படையில், கடப்பாறையை வைத்து குத்தி மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சி நடப்பதாக இந்து தமிழ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இதற்கு எதிராக நிற்க வேண்டும் எனும் நிலைப்பாடே என்னை திமுக பக்கம் அணி சேர வைத்தது. திமுக கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. அதனால்தான் தொகுதி கேட்டு நிர்ப்பந்திக்கவில்லை.

“என்னைப் பொறுத்த வரை மாநில ஆளுநர்கள் மத்திய அரசின் கொள்கை பரப்பு செயலாளர்களைப்போல் செயல்படுகின்றனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

“ஒரு சிலர் திராவிடத்தை அழிப்போம் என்கிறார்கள். ஆனால் தேசிய கீதம் இருக்கும் வரை திராவிடம் இருக்கும்,” என்று கமல்ஹாசன் மேலும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!