நாட்டில் முதல்முறை: தனியாருக்கு சொந்தமான வனப்பகுதியை விலை கொடுத்து வாங்கிய தமிழக அரசு

தேனி: தனியாருக்குச் சொந்தமான வனப்பகுதிகளை விலைகொடுத்து வாங்கியுள்ளது தமிழக அரசு.

இந்தியாவில் வர்த்தகம் இல்லாத பயன்பாட்டிற்காக மாநில அரசு இவ்வாறு இடம் வாங்கியிருப்பது இதுவே முதல் முறை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேனி மாவட்டம், மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 30.41 ஏக்கர் வனப்பகுதி அமைந்துள்ளது. மேகமலை புலிகள் காப்பகம் தமிழகத்தில் உள்ள ஐந்தாவது ஆகப் பெரிய புலிகள் காப்பகமாகும்.

மேலும், இந்தியாவின் 51வது புலிகள் காப்பகமாகவும் விளங்குகிறது. இங்கு அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான பகுதியில் ஏலக்காய், காபி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த தனியார் வனப்பகுதிக்குச் செல்ல முறையான பாதை வசதி இல்லை. இதனால் அப்பகுதியைக் கடந்து செல்ல அங்குள்ள மக்கள் சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து அக்குறிப்பிட்ட நிலப்பகுதியை வாங்க அரசுத்தரப்பு முயற்சி மேற்கொண்டது. அதன் பலனாக ஏழு பேருக்குச் சொந்தமான 30.41 ஏக்கர் பகுதியை தமிழக அரசு ரூ.2.33 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!