‘தமிழக மீனவர்கள் மீது அறிவிக்கப்படாத போர்’

தூத்துக்குடி: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் அராஜகங்கள், கைது நடவடிக்கைகள் பாஜக ஆட்சியில்தான் அளவில்லாமல் போனது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மோடி ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீது அறிவிக்கப்படாத போர் நடைபெறுவதாகவும் அவர் தூத்துக்குடியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது குறிப்பிட்டார்.

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு ஒரு துரும்பையும் எடுத்துப்போடவில்லை என்றும் முதல்வர் சாடினார்.

“எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழக மீனவர்களிடம் பாஜகவினர் வாக்கு கேட்டு வருகிறார்கள்,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ராமநாதபுரம்,– தூத்துக்குடி எனப் பல்வேறு மாவட்ட மீனவர்களுக்கு இலங்கையில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

“படகுகள் பறிமுதல், படகுகள் நாட்டுடைமை, கடும் அபராதம், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது என்று தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை அறிவிக்கப்படாத ஒரு போரை நடத்துவதும் பாஜக ஆட்சியில்தான் நடக்கிறது,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!