திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மாயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் உள்ள ஆதிஜெகநாதப் பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் காணாமல் போய்விட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இம்மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைகள் வைக்கப்பட்டிருக்கும் அரண்மனை பெட்டகத்தை ஆய்வு செய்த போது இந்த விவரம் தெரியவந்தது.

ராமநாதபுரம் சமஸ்தான ஆலய நிர்வாகத்தின் கீழ் பெருமாள் கோயில் செயல்பட்டு வருகிறது. கோயிலில் மூலவருக்கும் தாயாருக்கும் அணிவிக்கப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளைக் கோயிலில் உள்ள பாதுகாப்புப் பெட்டகம், ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள அறங்காவலர் பெட்டகத்தில் வைத்திருந்தனர்.

இந்தப் பெட்டகத்தையும் அதன் சாவியையும் கோயிலின் பரம்பரை ஸ்தானிகர் சீனிவாசன் என்பவர் வைத்திருப்பது வழக்கம்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்தின் திவானும் நிர்வாகச் செயலாளருமான பழனிவேல் பாண்டியன் நகைகளை ஆய்வு செய்தார்.

அப்போது பல நகைகளைக் காணவில்லை. இதனையடுத்து சீனிவாசனை விசாரித்து, அவரை பழனிவேல் பாண்டியன் பணி இடைநீக்கம் செய்தார்.

இந்தச் சூழ்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் ஆய்வாளரிடம் 30 வகையான தங்க நகைகள், 16 வெள்ளி நகைகளைக் காணவில்லை எனவும் இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி எனவும் பழனிவேல் பாண்டியன் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!