பத்து ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன: பழனிசாமி

சென்னை: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகக் கூறப்படுவது வெறும் மாயை என்று இந்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் தேர்தல் கள நிலவரங்கள் வேறு மாதிரியாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ள அவர், உத்தரப் பிரதேசம், குஜராத் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டுக்காக மத்திய அரசு பெரிய திட்டங்கள் எதற்கும் ஒப்புதல் வழங்கவில்லை என்றார்.

“தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பங்களிப்புகூட கிடைக்கவில்லை. தேசியக் கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றால் எங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது.

“உதாரணத்துக்கு, காவிரி நதிநீர் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை, நடுநிலையுடன் செயல்படவே விரும்புகின்றன. ஆனால், எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் உரிமை, தமிழக விவசாயிகளின் நலன்களில் மட்டுமே அக்கறை செலுத்துகிறோம்,” என்று பழனிசாமி கூறியுள்ளார்.

தேர்தல் கருத்துக் கணிப்புகளை அதிமுக நம்பவில்லை என்றும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!