சிறுத்தை வந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பான அச்சத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) இரவு சிறுத்தை நடமாட்டத்தைப் பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், அங்கிருந்த கால் தடப் பதிவுகள், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றின் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை உறுதிசெய்தனர்.

பொதுமக்களை எச்சரிக்கும் வகையில், நகர் முழுவதும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், சிறுத்தை தென்பட்டால் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக, சிறுத்தை நடமாட்டம் காரணமாக செம்மங்கரையில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி ஆகியவை உட்பட 20க்கும் மேலான பள்ளிகளுக்கு புதன்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்க மயிலாடுதுறை முதன்மைக் கல்வி அலுவலர் அம்பிகாபதி அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

பதுங்கியுள்ள சிறுத்தையைத் தேடும் பணி தொடர்வதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!