சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
“தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 7, 8 ஆகிய இரண்டு நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும்,” என்று வானிலை ஆய்வு நிலையம் அறிக்கையில் குறிப்பிட்டது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.