சென்னை: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தமிழகத்தில் கட்சி தலைவர்கள் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், 17ஆம் தேதி மாலை ஐந்து மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும்.
அதனால் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளில் இருந்து வாக்குப்பதிவு நடைபெறும் 19ஆம் தேதி வரை மூன்று நாள்கள் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு மூன்று நாள்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படும் எனவும் அறிவித்துள்ளது.