தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று, கடைகள் மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்கும் பொருட்டு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.