குற்றமற்றவன் என நிரூபிப்பேன்: இயக்குநர் அமீர்

மதுரை: போதைப்பொருள் கடத்தலில் தமக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை எனத் திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான எத்தகைய விசாரணைக்கும் தாம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்குத் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது நெருங்கிய நண்பர் என்று கருதப்படும் திரைப்பட இயக்குநர் அமீரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

அண்மையில் டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், புதன்கிழமை மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமீர், தனது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது உண்மைதான் என்றார்.

போதைப்பொருள் விவகாரத்தில் தொடக்கம் முதலே தாம் எந்தவித விசாரணைக்கும் தயார் என்று கூறி வந்ததாகக் குறிப்பிட்ட அவர் அத்துறையின் விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது என்றார்.

“விசாரணை தொடர்பாக ஏதேனும் அழுத்தம் உள்ளதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. இது குறித்து முழுமையாகப் பேச எனக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்,” என்றார் இயக்குநர் அமீர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!