12 ஆண்டுகளாக பாம்புகளை பிடித்து வந்தவர் நல்ல பாம்பு தீண்டி மரணம்

கடலூர்: காட்டில் பாம்பை விடுவிப்பதற்காகச் சென்ற பாம்புபிடி வீரர், பாம்பு கடித்து உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி, 36.

கடந்த 12 ஆண்டுகளாக வனத்துறை, தீயணைப்புத் துறை வீரர்களுடன் இணைந்து பாம்பு பிடிக்கும் தொண்டூழியப் பணியில் ஈடுபட்டு வந்தார். பாம்புகளைப் பிடித்து அவற்றை பத்திரமாக வனப்பகுதியில் விடுவிப்பது அவரது வழக்கம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) பண்ருட்டி முத்தையா நகரில் ஒரு வீட்டுக்குள் இருந்த நல்ல பாம்பு ஒன்றை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு தீயணைப்பு நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.

அதனை வனப்பகுதியில் விடுவிக்க உமர் அலி வந்தார். தீயணைப்புத் துறையினர் ஒரு டப்பாவில் அடைத்து வைத்திருந்த பாம்பை அவர் வேறு ஒரு டப்பாவுக்கு மாற்ற முயன்றபோது எதிர்பாராத விதமாக சீறி எழுந்த பாம்பு உமர் அலியைக் கொத்தியது.

அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு வீரர்கள், உடனடியாக உமர் அலியை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உமர் அலி உயிரிழந்தார். பண்ருட்டி காவல்துறையினர் இதுபற்றி விசாரணை நடத்துகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!