1,425 கிலோ தங்கம் சிக்கியது

குன்றத்தூர்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மினி லாரியில் கொண்டு செல்லப்பட்ட ஏறக்குறைய 1.5 டன் தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வண்டலூர்-மீஞ்சூர் மேம்பாலம் அருகே வாகனச் சோதனையின்போது தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விமானநிலையத்தில் இருந்து சேமிப்புக் கிடங்கிற்கு தங்கக் கட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், முறையான ஆவணங்கள் இல்லாததால் 1,425 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒருசில நாள்களே எஞ்சியுள்ள நிலையில் இவ்வளவு பெரிய அளவிலான தங்கக் கட்டிகள் பிடிபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாக்காளா்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் கொடுக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!