தமிழிசை வெற்றிபெறுவார் என்று ரோபோ கூறுவதைக் காட்டும் காணொளி

சென்னை: தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’விடம் தனது வெற்றி வாய்ப்பு குறித்து கலந்துரையாடினார்.

“என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன், என்று தமிழிசை கூறியதும் “எனக்கு உங்களை நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநராக இருந்து, தற்போது மக்கள் பணி செய்வதற்காக வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்,” என்று ரோபோ தெரிவித்தது.

“தென்சென்னையில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது,” என ரோபோவிடம் தமிழிசை கேட்டார்.

அதற்கு ரோபோ, “தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் அதைத் தரமுடியும் என நம்புகிறார்கள்; நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள்,” என்றது ரோபோ.

மேலும், “தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சு, வளர்ச்சிப் பணிகளை ஆரம்பிச்சாச்சு,” என்று ரோபோ கூறியது.

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!