நயினார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை: திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கி உள்ள நயினார் நாகேந்திரன் மீதான புகார் குறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் நயினார் நாகேந்திரனுடன் தொடர்புடைய மூவர் சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயில் மூலம் செல்லவிருந்தனர்.

இந்நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.4 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தப் பணத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மறுத்தார்.

இதையடுத்து நெல்லையில் சுயேட்சையாகப் போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

“நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோதப் பணப் பரிமாற்றச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

“அதேபோல் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இந்தப் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!