ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற விவசாயி மகன்

திருப்பூர்: விவசாயியின் மகன் ஐஏஎஸ் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான முகிலன், ஐஏஎஸ் தேர்வில் முதல் முயற்சியில் தேர்ச்சி பெறவில்லை.

எனினும் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் இரண்டாவது முறை பங்கேற்றுத் தேர்ச்சி பெற்றார். இதன் மூலம் இந்திய அளவில் அவருக்கு 404வது இடம் கிடைத்துள்ளது.

12ஆம் வகுப்பு வரை படித்த முகிலன், பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘ஆட்டோமொபைல்’ பொறியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என சிறு வயது முதலே கனவு கண்டுவந்த முகிலன், தோல்வியைக்கடந்து இலக்கை நோக்கி தொடர்ந்து பயணம் மேற்கொண்டதாகச் சொல்கிறார்.

“மக்களுக்குச் சேவை செய்ய ஐஏஎஸ் பணி பெரும் துணை புரியும். அதனால்தான் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். என் குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரி. ஐஏஎஸ் தேர்வுக்கு சுயமுயற்சியில்தான் பயிற்சி மேற்கொண்டு சாதித்தேன்,” என்கிறார் முகிலன்.

இதனால் விவசாயியான தனது தந்தையும் தாயும் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!