சென்னை: ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஜாஃபர் சாதிக்கிற்கு தொடர்புள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த 40 கோடி ரூபாய் பணத்தை அவர் திரைப்படங்கள் தயாரிக்க பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன என்று தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஜாஃபர் சாதிக்குடன் நெருக்கமாகப் பழகிய சென்னையைச் சேர்ந்த ஹவாலா முகவர் ஒருவரை அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர இருப்பதாக ஊடகச் செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
அவரிடம் விசாரணை நடத்துவதன் மூலம் ஜாஃபர் சாதிக் ரூ.40 கோடி தொகையை வைத்து எவ்வாறு ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டார் எனத் தெரியவரும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர்.
விசாரணை வளையத்துக்கள் கொண்டுவரப்படும் நபர் குறித்து மேலதிக தகவல்களை தர இயலாது என அமலாக்கத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.