திண்டுக்கல்: ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா குழுவினர் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வருகை புரிந்து சிறப்பு சுவாமி தரிசனம் செய்தனர்.
அக்குழுவில் ஐம்பது பேர் இடம்பெற்று இருந்ததாகவும் அனைவரும் தோக்கியோ நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
முருகப்பெருமானை தரிசித்து பரவசம் அடைந்ததாக அக்குழுவினர் தெரிவித்தனர்.