சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எந்தவிதமான அசம்பாவிதச் சம்பவங்களும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
எனவே, மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி எந்தத்தரப்பும் இதுவரை வலியுறுத்தவில்லை என்று குறிப்பிட்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மறுவாக்குப்பதிவு தொடர்பாக தேர்தல் எந்த பரிந்துரையையும் செய்யவில்லை என்றார்.