மலேசியா வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று வியாழக்கிழமை காலை சென்னைக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அப்போது கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக சென்னை வந்த விமானத்தில், ஒரு நபரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். பைக்குள் மறைத்து எடுத்த வந்த ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருளை யாரிடம் கொடுப்பதற்காக பயணி கடத்தி வந்தார்? பயணியின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!