மெட்ரோ ரயில் திட்டம்: ஒரு ரூபாய்கூட வழங்காத மத்திய அரசு

சென்னை: கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என தெரியவந்துள்ளது.

சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் இந்தத் திட்டம் குறித்து சில தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

அதன்படி கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி பொது முதலீட்டு வாரியத்தால், பங்குப்பகிர்வு மாதிரியின் கீழ் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் பொது முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான முன்மொழிவு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக காத்திருப்பதாக தினகரன் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்தத் திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிய உள்ள நிலையில் மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. எனவே, மாநில நிதியில் இருந்து தமிழக அரசு செலவீனங்களை மேற்கொண்டு வருவதாக ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!