மின்சாரம் தாக்கி யானை மரணம்

தேனி: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் பேரிஜம் ஏரியும் ஒன்று.

அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கான மின்சாரம் வனப்பகுதியில் இருந்து கம்பிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில் இரு நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஆண் யானை ஒன்று உணவு தேடி வனப்பகுதி வழியாக வந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் தோனி மலை குடியிருப்புப் பகுதிக்கு செல்லும் மின்சாரக் கம்பியில், யானையின் உடல் பட்டு மின்சாரம் தாக்கியது.

இதில் நிலை தடுமாறிய யானை பெரிய பள்ளத்தில் விழுந்ததாக தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சனிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள மக்கள் பள்ளத்தில் யானை விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் கூறியுள்ளனர்.

அங்கு சென்ற மாவட்ட வனத்துறை அதிகாரி ராஜ்குமார் மற்றும் வன அதிகாரிகள் யானை இறந்து கிடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

யானை எதனால் இறந்தது என்பது குறித்து சம்பவ இடத்தில் கால்நடை மருத்துவர்கள் உடல் பரிசோதனையும் செய்தனர்.

மலைப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானை இறந்த சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!