கோவை: கோவை தொழில் அதிபரிடமிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகள், ரொக்கப்பணத்தைப் பறிக்க முயற்சி மேற்கொண்டவர்கள் கைதாகினர்.
அக்கும்பலிடம் இருந்து ரூ.12 கோடி ரொக்கப்பணம், 140 பவுன் நகைகள், ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை கோவை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
தொழில் அதிபர் சிவராஜ் மின் காற்றாலைத் தொழிலை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவரது அலுவலகத்தில் பணியாற்றிய 13 பேர் ஒன்றுசேர்ந்து சிவராஜின் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அடைய திட்டமிட்டனர்.
இந்த மோசடி குறித்து தெரிய வந்ததும் காவல் துறையை அணுகினார் சிவராஜ். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட 5 பேரை முதலில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஐந்து பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின்போது ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் குறித்து தெரிய வந்தது.
ரூ.12 கோடி ரூபாய் ரொக்கப்பணமும் நகைகளும் கைபற்றப்பட்டன. இந்நிலையில் கைதானவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் மீண்டும் 5 பேரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.