கோவை தொழில் அதிபரிடமிருந்து ரூ.300 கோடி சுருட்ட முயன்ற ஐவர் கைது, 8 பேருக்கு வலைவீச்சு

கோவை: கோவை தொழில் அதிபரிடமிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகள், ரொக்கப்பணத்தைப் பறிக்க முயற்சி மேற்கொண்டவர்கள் கைதாகினர்.

அக்கும்பலிடம் இருந்து ரூ.12 கோடி ரொக்கப்பணம், 140 பவுன் நகைகள், ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை கோவை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

தொழில் அதிபர் சிவராஜ் மின் காற்றாலைத் தொழிலை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவரது அலுவலகத்தில் பணியாற்றிய 13 பேர் ஒன்றுசேர்ந்து சிவராஜின் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அடைய திட்டமிட்டனர்.

இந்த மோசடி குறித்து தெரிய வந்ததும் காவல் துறையை அணுகினார் சிவராஜ். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட 5 பேரை முதலில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஐந்து பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின்போது ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் குறித்து தெரிய வந்தது.

ரூ.12 கோடி ரூபாய் ரொக்கப்பணமும் நகைகளும் கைபற்றப்பட்டன. இந்நிலையில் கைதானவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் மீண்டும் 5 பேரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!