தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நகரமயமாக்கலில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது: முதல்வர் பெருமிதம்

1 mins read
4d9c0024-1cf1-4581-b781-67fd28f11077
முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: நகர மயமாக்கலுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

கடந்த 1991ஆம் ஆண்டு, இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 25.71 விழுக்காடாக இருந்தது. 2011ஆம் ஆண்டு இது 31.16%ஆக உயர்ந்தது என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அதே வேளையில், தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை 2011ஆம் ஆண்டில் 48.45 விழுக்காடு என உயர்ந்து, இந்திய சராசரியைவிட ஏறத்தாழ 17.29% என அதிகரித்திருந்தது.

“இதன் மூலம் நகரமயமாதலில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும் பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் நகராட்சிகள் மாநகராட்சியாகவும் வளர்ச்சி பெற்று வருவதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்