தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: 15 பேருக்கு 20 ஆண்டு சிறை

1 mins read
c321b722-a7bf-4931-8103-c5b1bf4779a3
படம் - தமிழ் முரசு

விழுப்புரம்: திண்டிவனம் அருகே 2019ஆம் ஆண்டு இரு சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.32 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 9 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு சகோதரிகள் கடந்த 2019ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அதில் 9 வயது சிறுமி உயிரிழந்தார்.

விசாரணையில், பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த அந்தச் சிறுமிகளுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து அவர்களின் தாய் மாமாவான கஜேந்திரன், தாத்தா துரைசாமி, உறவினர்களான தீனதயாளன், அஜித் குமார், பிரபாகரன் உள்ளிட்ட 15 பேரும் தொடர்ச்சியாக 5 மாதங்களுக்கும் மேலாக அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துவந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து 15 பேர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.

விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) தீர்ப்பு அளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்