தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசின் முடிவில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம்

1 mins read
கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசுக்கு எதிரான வழக்கு
2d2715e2-2a5b-45fe-babb-22c8a5a5e61f
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மாண்டோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என்று கூறியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. மக்களின் வரிப்பணத்தை எடுத்து கள்ளச்சாராய உயிரிழப்புக்கு இழப்பீடாக வழங்கக் கூடாது என்று குமரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கு வெள்ளிக்கிழமை நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில் குமார் அமர்வில் விசாரிக்கப்பட்ட அந்த வழக்கை, “அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மேலும், எந்த ஆதாரமும் இல்லாமல் விளம்பர நோக்கத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்