தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக மகளிர் உரிமைத் தொகை உத்தரப் பிரதேச வங்கிக் கணக்கில் வரவு

2 mins read
4785929c-bdfd-461c-ba25-f19d34c0496f
தமிழ்நாடு அரசு 2023ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.  - கோப்புப்படம்: ஊடகம்

பொள்ளாச்சி: தமிழ் நாட்டின் கிணத்துக்கடவில் வசிக்கும் பெண்ணுக்குச் செல்ல வேண்டிய தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கில் இரண்டு ஆண்டுகளாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்​டம் கிணத்​துக்​கடவு கொண்​டம்​பட்​டியைச் சேர்ந்​தவர் 50 வயது மகேஸ்​வரி. இவர் இரண்டு ஆண்​டு​களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்​தொகை பெற விண்​ணப்​பித்​தார். ஆனால், விண்​ணப்​பம் ஏற்​றுக்​கொள்​ளப்​பட்​டதற்​கான எவ்விதக் குறுஞ்​செய்​தி​யும் வரவில்லை. அதனால், அவருடைய விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​பட்​ட​தாகக் கரு​தி​யுள்​ளார்.

இந்​த நிலை​யில், கிணத்​துக்​கடவு ஒன்​றி​யத்​தில் ஜூலை 25ஆம் தேதி நடந்த ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாமில் மீண்​டும் மகளிர் உரிமைத்​தொகை கோரி விண்​ணப்​பித்​துள்​ளார்.

மனுவை ஆய்வு செய்த அதி​காரி​கள், “உங்​களுக்கு இரண்டு ஆண்​டு​களாக மகளிர் உரிமைத்​தொகை வழங்​கப்​படு​கிறது. வங்​கிக் கணக்கைச் சரி​பாருங்​கள்,” எனக் கூறினர்.

இதையடுத்​து, கிணத்​துக்​கடவு பரோடா வங்​கி​யில் மகேஸ்​வரி விசா​ரித்​தார். ஆய்வு செய்த வங்கி ஊழியர்​கள், மகேஸ்​வரி​யின் ஆதார் எண்​ணுடன் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாந்​திதேவி என்​பவரது வங்கிக் கணக்கு இணைக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், அவரது வங்​கிக் கணக்​குக்கு மகளிர் உரிமைத்​தொகை மாதந்​தோறும் செல்​வ​தாக​வும் தெரி​வித்​தனர்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த மகேஸ்​வரி, பொள்​ளாச்சி துணை ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் மனு அளித்​தார். அதனையடுத்து மகேஸ்வரியின் வங்கிக் கணக்குக்கு உரிமைத் தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு 2023ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்) செயல்படுத்தி வருகிறது. இதுவரை 1.15 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பெறுகின்றனர். இந்தத் தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்