தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எண்ணெய்க் கப்பல் மோதி கடலில் மூழ்கிய மீன்பிடிப்படகு; 9 பேர் மீட்பு

1 mins read
3d0ec827-3a2b-4575-9c3d-76fca00f801d
கன்னியாகுமரியின் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களின் படகை அவ்வழியே சென்ற எண்ணெய்க் கப்பல் மோதித் தள்ளியதில் சேதமடைந்த படகு கடலில் மூழ்கும் இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது. - படம்: ஊடகம்

கன்னியாகுமரி: குளச்சல் பகுதி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 9 பேர் கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். குளச்சல் பகுதியில் இருந்து 20 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற எண்ணெய்க் கப்பல் ஒன்று, மீன்பிடி விசைப்படகு மீது மோதியது.

மோதியதில் சேதமடைந்த விசைப்படகு கடலில் மூழ்கத் தொடங்கியது. அந்தப் படகில் இருந்தவர்களைக் காப்பாற்றாமல் எண்ணெய்க் கப்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.

நல்லவேளையாக அந்தப் பக்கமாக வந்த விசைப்படகில் இருந்த மீனவர்கள், கடலில் குதித்து மூழ்கவிருந்த 9 பேரையும் காப்பாற்றினர்.

எண்ணெய்க் கப்பல் மோதியதால் கடுமையாகச் சேதமடைந்த மீன்பிடிப்படகு கடலில் மூழ்கும் காணொளிக் காட்சி சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்