சுங்கக் கட்டண உயர்வு மக்களுக்குப் பெருஞ்சுமை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
2 mins read
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா. - கோப்புப்படம்: ஊடகம்
Toll gate charge hike: A heavy burden on the people: Federation of Merchants Associations
**Original Text in Tamil:**
சென்னை:
தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் செப்.1-ம் தேதி முதல் 5 சதவீதத்திலிருந்து 12 விழுக்காடு வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
தொடரும் சுங்கக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும். இதனால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
இது பொதுமக்களின் மீது சுமத்தப்படும் பெரும் சுமை என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சுங்கக் கட்டண உயர்வு குறித்து கருத்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
போக்குவரத்து தொழிலுக்கும், பயணிகள் போக்குவரத்திற்கும், வணிகர்களுக்கும் தொடர்ந்து பயணம் சம்பந்தமான தொழில்களை மேற்கொள்பவர்களுக்கும், இது ஒரு மிகப்பெரும் சுமையாக அமையும். அத்துடன் தொடரும் சுங்கக் கட்டண உயர்வு அத்தியாவசிய பொருட்களான உணவுப் பொருட்களின் மீது விலைவாசி உயர்வுக்கும், நுகர்வோர்களுக்கும் மிகப்பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே அனைத்துத் தரப்பினர் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து சுங்கக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது.
இது தவிர, காலாவதியான சுங்கச் சாவடிகளையும் அகற்றிடக்கோரி பேரமைப்பு வலியுறுத்தி வருகின்றது. தமிழக சுங்கச் சாவடிகளில் மட்டுமே ஏறத்தாழ ஆண்டுக்கு ரூ.4,200 கோடி சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் கட்டண உயர்வு என்பது, பொதுமக்களின் மீது சுமத்தப்படும் பெரும் சுமை என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, உடனடியாக இந்த சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைத்திட வேண்டும் என்று மத்திய அரசுக்கு திரு ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சாமானிய மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு மீட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வதோடு, சாமானிய பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் தொடங்கி அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடிய சூழலையும் உருவாக்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கசாவடிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
**Improved Translation in English:**
**Chennai:**
Toll charges will be raised from 5 per cent to 12 per cent at 25 toll outlets on the Tamil Nadu highways from September 1.
Essential commodities' prices will also rise due to the ongoing toll collection hike. Consumers will be greatly affected by this.
It has been urged that the central government should suspend the toll fare hike, considering that it is a heavy burden imposed on the public.
Many political leaders are condemning the toll fare hike.
For the transport industry, passenger transport, business people and those who continue to run travel-related businesses, this will be a tremendous burden. In addition, the ongoing toll fare hike will have a major impact on essential commodities such as food items and will cause serious loss to consumers.
Hence, bearing all this in mind, the Tamil Nadu Merchant Associations' Council has continuously opposed the toll fare hike on behalf of all sections.
In addition to this, the Council has been urging that expired toll booths should be removed.
In Tamil Nadu, nearly Rs. 4,200 crore is being collected as toll fees annually, and a further hike in fares would be a huge burden on the public, which is why the central government should immediately suspend the toll fare hike. Mr. A.M. Vikrama Raja has stressed this to the central government.
In this regard, the General Secretary of AMMK, T.T.V. Dhinakaran, has said that the central government should take back the toll booth fare hike, which places an additional burden on ordinary people.
He has said that apart from increasing the rent of goods vehicles due to the toll booth fare hike, the prices of all kinds of essential commodities used by ordinary people on a daily basis, such as vegetables, will also rise further.
Dhinakaran has also urged that the National Highway Authority should locate and remove toll booths that are operating in Tamil Nadu in an expired state.
Generated by AI
சென்னை: மத்திய அரசு சுங்கக் கட்டணத்தை உயர்த்துவதால் பொதுமக்களே பெரிதும் பாதிப்புக்குள்ளாவர் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடு வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
தொடரும் சுங்கக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும். இதனால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
இது பொதுமக்களின் மீது சுமத்தப்படும் பெரும் சுமை என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சுங்கக் கட்டண உயர்வு குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
போக்குவரத்து தொழிலுக்கும், பயணிகள் போக்குவரத்திற்கும், வணிகர்களுக்கும் தொடர்ந்து பயணம் சம்பந்தமான தொழில்களை மேற்கொள்பவர்களுக்கும், இது ஒரு மிகப்பெரும் சுமையாக அமையும். அத்துடன் தொடரும் சுங்கக் கட்டண உயர்வு அத்தியாவசிய பொருள்களான உணவுப் பொருள்களின் மீது விலைவாசி உயர்வுக்கும், நுகர்வோர்களுக்கும் மிகப்பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே அனைத்துத் தரப்பினர் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து சுங்கக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது.
இது தவிர, காலாவதியான சுங்கச் சாவடிகளையும் அகற்றிட பேரமைப்பு வலியுறுத்தி வருகின்றது. தமிழக சுங்கச் சாவடிகளில் மட்டுமே ஏறத்தாழ ஆண்டுக்கு ரூ.4,200 கோடி சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் கட்டண உயர்வு என்பது, பொதுமக்களின் மீது சுமத்தப்படும் பெரும் சுமை என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, உடனடியாக இந்த சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைத்திட வேண்டும் என்று மத்திய அரசுக்கு திரு ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சாமானிய மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு மீட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வதோடு, சாமானிய பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் தொடங்கி அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடிய சூழலையும் உருவாக்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார்.