திருச்சி: திருச்சி – துவரங்குறிச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு, கடன் அடைப்பு ஆகிய காரணங்களுக்காக தனியார் மயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அதானி சாலை போக்குவரத்து குழுமம் ₹1,692 கோடிக்கு ஒப்பந்தம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது என தினகரன் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் பல துறைகள் மேம்பாடு, கடன் சுமை போன்ற காரணங்களுக்காக தனியார் மயமாக்கப்பட்டு வருவதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

