பிரதமரின் பேரணியில் விதிமீறல்; காவல்துறை வழக்குப்பதிவு

சென்னை: இம்மாதம் 9ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணி மூலம் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

இந்நிலையில், அப்பேரணியின்போது விதிகள் மீறப்பட்டதாகக் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

பனகல் பூங்காவிலிருந்து தேனாம்பேட்டை வரை இடம்பெற்ற வாகனப் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்பேரணிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னைக் காவல்துறையினர் அனுமதி அளித்திருந்த நிலையில், விதிகளை மீறி சாலைகளில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

அதன் தொடர்பில் தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் மாம்பலம், பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் செல்லவிருக்கிறார்.

இம்மாதம் 15ஆம் தேதி நெல்லை செல்லும் அவர், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவார் என்று தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!