வாக்குகள் எண்ணும் பணி: 1,005 பணியாளர்கள் முதற்கட்ட குலுக்கலில் தேர்வு

வாக்குகள் எண்ணும் பணி: 1,005 பணியாளர்கள் முதற்கட்ட குலுக்கலில் தேர்வு

2 mins read
a6e99751-4765-4985-b751-fdc15065a7c8
சட்​டமன்றத் தொகுதி வாரி​யாக கணினி குலுக்​கல் முறை​யில் தேர்வு செய்​யும் பணி சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் கட்டட வளாகத்​தில் செவ்வாய்க்கிழமை நடை​பெற்​றது. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக 1,005 பணியாளர்கள் முதற்கட்டமாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இத்தகவலை மாவட்டத் தேர்​தல் அலு​வலரும் மாநக​ராட்சி ஆணை​யருமான ஜெ.குமரகுருபரன் வெளியிட்டார்.

சட்​டமன்றத் தொகுதி வாரி​யாக கணினி குலுக்​கல் முறை​யில் தேர்வு செய்​யும் பணி சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் கட்டட வளாகத்​தில் செவ்வாய்க்கிழமை நடை​பெற்​றது.

அப்போது, வாக்கு எண்​ணிக்கை மையங்​களில் மேற்​கொள்ள வேண்​டிய நடை​முறை​கள் தொடர்​பாக பல்​வேறு ஆலோ​சனை, அறி​வுரைகளை திரு குமரகுருபரன் வழங்​கி​னார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. சென்னையில் உள்ள ஆர்​.கே.நகர், திரு​விக நகர், ராயபுரம், துறை​முகம், சேப்​பாக்​கம்​-​திரு​வல்​லிக்​கேணி ஆகிய தொகு​தி​களின் மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் ராணி மேரி கல்​லூரி வாக்கு எண்​ணும் மையத்​தில் வைக்​கப்​பட்​டுள்​ளன.

அதேபோல், பெரம்​பூர், கொளத்​தூர், வில்​லி​வாக்​கம், எழும்​பூர், ஆயிரம் விளக்​கு, அண்​ணாநகர் தொகு​தி​களின் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் லயோலா கல்​லூரி மையத்​தி​லும், விரு​கம்​பாக்​கம், சைதை, தியாக​ராயநகர், மயி​லாப்​பூர், வேளச்​சேரி ஆகிய தொகு​தி​களின் இயந்திரங்​கள் அண்ணா பல்​கலைக்​கழக வாக்கு எண்​ணும் மையத்​தி​லும் உள்ள பாது​காப்பு அறை​களில் வைக்​கப்​பட்​டுள்​ளன.

வாக்கு எண்​ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருபத்து நான்கு மணி நேரமும் அம்மையங்களைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புப் பணி​யில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடும் மேற்​பார்​வை​யாளர்​கள், உதவி​யாளர்​கள், நுண் பார்​வை​யாளர்​கள் என மொத்​தம் 1,005 பேர் முதற்​கட்​ட​மாக கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்