பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயலாற்றுவோம்: சீமான் உறுதி

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயலாற்றுவோம்: சீமான் உறுதி

1 mins read
dba52f4c-ac33-4d4f-a2b3-ce3a9633b265
சீமான். - கோப்புப் படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: தேர்தலில் தோல்வியடைந்தாலும் தமிழகத்தில் பொறுப்​புள்ள எதிர்க்​கட்​சி​யாக நாம் தமிழர் கட்சி தொடர்ந்து செய​லாற்​றும் என்​று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அறிக்கை ஒன்றை அவர் வெளி​யிட்டுள்ளார்.

அதில், அண்​மை​யில் நடை​பெற்று முடிந்த சட்​டமன்ற பொதுத்​தேர்​தலில் நாம் தமிழர் கட்​சிக்கு வாக்​களித்த அனை​வருக்​கும் நன்​றி தெரி​விப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழகம் எனும் தாய் நிலத்​தின் நலனுக்​காக​வும் உயர்​வுக்​காக​வும் தொடர்ச்​சி​யாக களப்​பணி​யாற்​றி, மண்​ணுக்​கும், மக்​களுக்​கு​மான ஆக்​கபூர்வ மாற்று அரசி​யலை பொறுப்​புள்ள எதிர்க்​கட்​சி​யாய் நின்று நாம் தமிழர் கட்சி செய​லாற்​றும்,” என்று சீமான் தெரி​வித்​துள்​ளார்.

மேலும், வெற்​றி​பெற்ற அனைத்து சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களுக்​கும் முதல்வராகப் பொறுப்​பேற்​க​வுள்ள விஜய் தலை​மையி​லான தமிழக வெற்​றிக்​கழக புதிய அரசுக்​கும் அவர் வாழ்த்​து கூறியுள்ளார்.

இதனிடையே, கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தோல்வி கண்டது. அப்போது தனது கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் மத்தியில் பேசியபோது சீமான் கண்கலங்கியது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

“சட்​டப்​பேர​வைக்​குள் செல்​ல​வேண்​டும் என்று எனக்கு விருப்​பமில்​லை. நாட்டை வெல்​லாமல், ஒரு சில தொகுதிகளை வெல்​வ​தில் ஒன்​றும் ஆகப் போவ​தில்​லை. ஆனாலும் வென்று உள்ளே போயிருக்​கலாம். மக்​களின் குரலாக ஒலித்​திருக்​கலாம். இது நம் தோல்வி அல்ல. மக்​களின் தோல்​வி,” என்று சீமான் பேசும் காட்சிகள் அக்காணொளியில் இடம்பெற்றுள்ளன.

இது சீமானை சீண்டிப் பார்க்கும் வேலை என அவரது ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்