துவாஸ் சோதனைச்சாவடியில் கார் மோதி துணைக் காவல்படை அதிகாரி படுகாயம்

துவாஸ் சோதனைச்சாவடியில் கார் மோதி, துணைக் காவல்படை (Auxiliary police) அதிகாரி ஒருவர் தலையில் படுகாயம் அடைந்தார்.
இவ்விபத்து வியாழக்கிழமை இரவு நிகழ்ந்தது.

சிங்கப்பூர் பதிவெண் கொண்ட அந்த கார் மோதியதால் ஏற்பட்ட இவ்விபத்து குறித்து இரவு 12.55 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

வேகமாகச் சென்ற கார், கண்காணிப்புச் சாவடிக்கு வெளியே பணியிலிருந்த அந்த அதிகாரிமீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அந்தத் துணைக் காவல்படை அதிகாரியும் காரின் ஓட்டுநரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

காயமடைந்த அதிகாரியின் குடும்பத்தாருக்கு ஆதரவு வழங்க குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையமும் செர்ட்டிஸ் நிறுவனமும் அவர்களுடன் தொடர்பில் இருக்கின்றன.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!