தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடிநுழைவுச் சாவடிகளில் வழக்க நிலை

3 mins read
92d636bf-b8a5-46e4-afa7-97278fc7c510
-

கணினிக் கோளாறு காரணமாக தரைவழி எல்லைகளில், விமான நிலையத்தில் நான்கு மணி நேரம் நீடித்த தாமதம் அகன்றது

சிங்­கப்­பூ­ரின் தரைவழி, விமான நிலைய சோத­னைச்சாவ­டி­களில் செயல்­படும் குடி­நு­ழைவு அனுமதி கணினி முறை­யில் ஏற்­பட்ட கோளாறு கார­ண­மாக நேற்று நான்கு மணி நேரத்­திற்­கும் மேலாக தாம­தம் ஏற்­பட்­டது.

அது பற்றி குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் ஃபேஸ்புக்­கில் நேற்று முற்­ப­கல் 11.28 மணிக்கு அறி­வித்­தது.

பய­ணி­க­ளுக்கு ஏற்­பட்டு இருக்­கும் சங்­க­டத்­திற்­காக தான் வருந்­து­வ­தா­க­வும் நிலை மையைப் புரிந்­து­கொண்டு அவர்­கள் பொறு­மை­யு­டன் ஒத்­து­ழைக்க வேண்­டும் என்­றும் ஆணை­யம் கேட்­டுக்­கொண்­டது.

அது, பிறகு பிற்­ப­கல் 3.58 மணிக்கு புதி­தாக ஓர் அறி­விப்பை வெளி­யிட்­டது.

அனைத்து சோத­னைச் சாவடி­க­ளி­லும் குடி­நு­ழைவு அனுமதி முறை வழக்க நிலைக்குத் திரும்­பி­விட்­ட­தாக ஆணை­யம் தெரி­வித்­தது.

கணினி ஏற்­பாட்­டில் ஏற்­பட்ட கோளா­றுக்­கான மூலக் கார­ணம் என்ன என்­ப­தைக் கண்­டு­பி­டிக்க புலன்­வி­சா­ரணை நடந்து வரு­வ­தா­க­வும் ஆணை­யம் கூறியது.

சாங்கி விமான நிலை­யத்­தின் நான்கு முனை­யங்­க­ளி­லும் தானி­யங்கி அனு­மதி வாயில்­கள் அனைத்­தும் பாதிக்­கப்­பட்­டதை அடுத்து அங்கு இருந்த பய­ணி­கள், ஊழி­யர்­கள் நிர்­வ­கிக்­கும் முகப்­பு­க­ளுக்குத் திருப்­பி­வி­டப் பட்­ட­தாக நேற்று பிற்­ப­கல் 2.03 மணிக்கு ஆணை­யம் கூறி­யது.

உட்­லண்ட்ஸ், துவாஸ் தரை வழி சோதனைச்சாவ­டி­க­ளிலும் சில தானி­யங்கி அனு­மதிவாயில்­ கள் பாதிக்­கப்­பட்­டன. என்­றா­லும் அத­னால் குடி­நு­ழைவு அனு­மதி கொடுப்­ப­தில் பிரச்­சி­னை­கள் ஏற்­ப­ட­வில்லை என்­றும் ஆணை­யம் மேலும் கூறியது.

சூழ்­நி­லை­யைச் சமா­ளித்து சட்ட ஒழுங்கை உறு­திப்­ப­டுத்த ஏது­வாக விடுப்­பில் இருந்த அனைத்து ஊழி­யர்­களும் பணிக்கு வரும்­படி அழைக்­கப்­பட்டு இருந்­த­தா­க­வும் ஆணை­யம் குறிப்­பிட்­டது.

உத­விக்கு விரைந்த அதி­கா­ரி­க­ளு­டன் ஒத்­து­ழைக்­கும்­படி சோத­னைச்சாவ­டி­களில் காத்­திருந்த பய­ணி­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர்.

அனு­மதி பெறு­வ­தற்குக் கொஞ்­சம் கூடு­தல் நேர­மா­கும் என்­ப­தும் அவர்­க­ளி­டத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

தாம­தம் ஏற்­படும் என்­றும் ஏதே­னும் உதவி தேவை எனில் பய­ணி­கள் அதி­கா­ரி­களை அணு­க­லாம் என்­றும் சாங்கி விமான நிலை­யம் நேற்று பிற்­ப­கல் சுமார் 12.30 மணிக்கு டுவிட்­ட­ரி­லும் ஃபேஸ்புக்­கி­லும் தெரி­வித்­தது.

விமான நிலைய முனையங்­களில் காத்­தி­ருந்த பய­ணி­களுக்கு விமான நிலை­யம் உத­வி­ய­தா­க­வும் உடனே புறப்­ப­ட­விருந்த விமா­னங்­களில் பயணம் செய்­ய­வி­ருந்­த­வர்­களுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­பட்­ட­தா­க­வும் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறினார்.

இதற்கு முன்­ன­தாக ஆணை­யம் ஓர் அறி­விப்பை விடுத்­தது. அவ­ச­ர­மில்­லாத அனைத்து பய­ணங்­க­ளை­யும் ஒத்­தி­வைக்­கும்­படி பய­ணி­க­ளுக்கு அது நேற்று பிற்­ப­கல் 12.03 மணிக்கு ஆலோ­சனை கூறி­யது.

ஆணை­யத்­தின் ஃபேஸ்புக்­கில் உட­னுக்­கு­டன் தக­வல்­கள் இடம்­பெ­றும் என்­றும் அது குறிப்­பிட்டு இருந்­தது.

நண்­ப­க­லுக்கு முன்­ன­தாக தரை வழி சோத­னைச்­சா­வ­டி­கள் வழி­யாக சிங்­கப்­பூ­ருக்­குள் வர முயன்ற வாகன ஓட்­டு­நர்­கள், தாங்­கள் வரி­சை­யில் காத்­திருக்க வேண்டி இருந்­ததாக இணை­யத்­தில் தெரி­வித்­த­னர்.

சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்கும் மலே­சி­யர்­க­ளுக்­கான ஃபேஸ்புக் குழு­மத்­தில் பலரும் படங்­களை வெளி­யிட்டு இருந்­தனர். அந்­தப் படங்­கள், கடற்­பா­லத்­தில் வாக­னங்­கள் நீண்ட வரி­சை­யில் நின்­றி­ருந்­ததைக் காட்­டின. குடி­நு­ழைவுக் கூடத்தில் பய­ணி­கள் காத்­தி­ருந்­த­தை­யும் அந்­தப் படங்­கள் காட்­டின.

அதே­போல, சாங்கி விமான நிலை­யத்­தி­லும் நீண்­ட­வ­ரிசை காணப்­பட்­டது.

நண்­ப­கல் 12 மணிக்கு முனை­யம் 3ன் புறப்­பாட்­டுக்கூடத்­தில் ஒவ்­வொன்­றும் சுமார் 50 மீட்­டர் நீளத்­துக்கு இரண்டு வரி­சை­களில் பயணிகள் நின்­றிருந்­த­தைக் காண முடிந்­தது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

ஆனா­லும் முனை­யம் 1, 2, 4ல் பய­ணி­கள் வரிசை எது­வும் காணப்­ப­ட­வில்லை என்றும் அது குறிப்பிட்டது.