உக்ரேன் அதிபரைக் கொல்ல சதி; பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் கைது

சதித்திட்டத்தை ரஷ்யா வகுத்ததாகக் குற்றச்சாட்டு

கியவ்: உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியையும் அந்நாட்டு உயரதிகாரிகளையும் கொல்வதற்குச் சதி செய்ததாகக் கூறி, உக்ரேன் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘ஏஎஃப்பி’ செய்தி தெரிவிக்கிறது.

இந்தச் சதித் திட்டத்தில் ரஷ்யாவிற்குப் பங்கிருப்பதாக உக்ரேன் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ரஷ்ய அரசுப் பாதுகாப்புத் துறை வகுத்த திட்டத்தைச் செயல்படுத்திய சந்தேகத்தின்பேரில், உக்ரேன் அரசுப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அவ்விரு கர்னல்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உக்ரேனிய அரசுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

கடந்த 2022ஆம் ஆண்டில் உக்ரேன்மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு முன்னரே அவ்விரு கர்னல்களும் வேலையில் சேர்ந்ததாகக் கூறப்பட்டது.

அவ்விருவரும் ரஷ்ய அரசுப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முகவர் கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று உக்ரேன் தெரிவித்தது.

அதிபர் ஸெலன்ஸ்கியைக் கடத்திக் கொல்ல, அவருடைய பாதுகாவலர்களில் எவரேனும் முன்வருவார்களா என்று அவ்விரு கர்னல்களும் தேடி வந்ததாகச் சொல்லப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!