ஜகார்த்தா: இந்தோனீசியாவின் லெம்போக் தீவில் அண்மையில் பலமுறை நிலநடுக்கங்கள் ற்பட்டன. இதனால் அந்தத் தீவு பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது கொசுக்களால் பரவும் மலேரியா நோயால் அத்தீவு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தீவில் சுகாதார நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 128 பேர் மலேசியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர் என்று மேற்கு லொம்போக் சுகாதார வாரியத்தின் தலைவர் திரு ரஹ்மான் சானான் புத்ரா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அதிக அளவில் மலேரியா நோய் பரவி வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.
இந்தோனீசியாவின் லொம்போக்கில் மலேரியா
1 mins read

