ஃபுளோரென்ஸ் சூறாவளியால் ஐவர் மரணம்

ஃபுளோரென்ஸ் சூறாவளியால் ஐவர் மரணம்

1 mins read

வில்மிங்டன்: ஃளோரென்ஸ் சூறாவளியால் அமெரிக்காவின் கரோலினா கடலோரப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. சூறாவளி காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வடகரோலினாவில் உள்ள ஒரு வீட்டின் மீது மரம் விழுந்தததால் பெண் ஒருவரும் அவரது குழந்தையும் மாண்டனர். காயமுற்ற அந்தப் பெண்ணின் கணவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சூறாவளி காரணமாக கரோலினாவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.