அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்கள் மீது 10 விழுக்காடு கூடுதல் வரி விதித்துள்ளார். அடுத்த வாரத்திலிருந்து நடப்புக்கு வரும் இந்த நடவடிக்கையின் மூலம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்துகொண்டு இருக்கும் வர்த்தகப் போரை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 6,000 பொருள்கள் மீது இந்தக் கூடுதல் இறக்குமதி வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. கைப்பைகள், அரிசி, துணிமணிகள், மெத்தைகள் போன்றவை கூடுதல் வரிவிதிப்புக்கு இலக்காகி உள்ளன. ஆனால், கூடுதல் வரிவிதிப்புக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'ஆப்பிள்வாட்ச்' போன்ற தொழில்நுட்பப் பயனீட்டாளர் சாதனங்கள் கூடுதல் வரி யிலிருந்து தப்பியுள்ளன. அமெரிக்கா இதுபோன்ற கூடுதல் வரிகளை விதித்தால் தானும் பதில் நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக சீனா முன்னதாக கூறி இருந்தது.
இந்தப் புதிய வரிவிதிப்பு இம்மாதம் 24ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும். தற்போது இது 10 விழுக்காடு என்ற அளவில் இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு ஏதும் எட்டப்படாவிடில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரி 25 விழுக்காடாக உயரக்கூடும். "முறையற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபடுவதை நிறுத் திக்கொண்டு அமெரிக்க நிறுவனங்களிடம் சீனா நியாயமாக நடக்க வேண்டும் என நாங்கள் மாதக் கணக்காக வலியுறுத்தி வருகிறோம்," என்று டிரம்ப் கூறினார். "என்னென்ன மாற்றங்களைச் செய்யவேண்டும் என் பது குறித்து நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். எங்களை முறையாக நடத்துவதற் கான எல்லா வாய்ப்புகளையும் சீனாவுக்கு வழங்குகிறோம். ஆனால், இதுவரை தனது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள சீனா விரும்பவில்லை," என்றார் அவர். இதற்குப் பதில டியாகவே இந்தப் புதிய வரிகள் விதிக்கப்பட்டிருப்பதாக டிரம்ப் கூறினார். "இந்த நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத் தால், உடனடியாக அமெரிக்கா மூன்றாம் கட்ட வரிவிதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்," என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

