தென்கொரிய அதிபர் மூன்று நாள் வடகொரியா பயணம்

தென்கொரிய அதிபர் மூன்று நாள் வடகொரியா பயணம்

2 mins read
62443c90-c3b9-4fff-b6b3-47a02a3f73d9
-

கொரிய தீபகற்பத்தில் அணுவாயுத களைவு பற்றிய பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் சந்தித்துள்ளனர். இவ்வாண்டு தொடக்கம் முதல் தென்கொரியாவோடும் அமெரிக்கா­வோடும் இதற்கு முன்னர் மேற்­ கொண்டிராத சந்திப்புகளை வட­கொரியா நடத்தியுள்ளது. இருதரப்பும் பொதுவான நலன்­கள் குறித்து மட்டுமே பேச்சு­ வார்த்தைகளில் ஈடுபட்ட நிலை­யில், வடகொரியா­வுக்கும் அமெரிக்­ காவுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சு­வார்த்தைகள் தேக்கம் அடைந்துள்ள­தாக கூறப்படுகிறது. இதில் நடு­வராக செயல்படுவதில் தென்­கொரியா முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்நிலையில், வடகொரியாவில் மூன்று நாட்கள் பயணம் மேற்­கொள்வதற்காக தென்கொரிய அதிபர் மூனும் அவரது துணை­வியார் கிம் ஜாங் சூக்கும் நேற்று காலை பியோங்யாங் சென்றடைந்­தனர். அவர்களை கிம் ஜோங் உன்னும் அவரது துணைவியார் ரி சோல் ஜூவும் வரவேற்றனர். சந்தித்த உடனேயே இரு தலை­வர்களும் கைகுலுக்கி கட்டி அணைத்துக்கொண்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் தென்கொரிய அதிபர் ஒருவர் வடகொரியாவுக்குச் செல்வது இதுவே முதல்முறை எனத் தெரி­ விக்கப்பட்டது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவமற்ற எல்லையில் நடை­பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு தொடங்கி, இரு தலைவர்களும் மூன்றாவது முறை­யாக சந்தித்துள்ளனர். 1953ஆம் ஆண்டில் கொரியப் போர் முடிவுக்கு வந்தாலும், அதன் தொடர்பில் எந்தவோர் அமைதி உடன்பாடும் எட்டப்படவில்லை. தற்போதைய சந்திப்பில், இரு நாட்டுத் தலைவர்களும் அணு­ ஆயுத களைவுக்கான நடைமுறை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பான விவ­ரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்தப் பேச்சுவார்த்­தை தொடர்­பில் தென்கொரியத் தரப்பில் இரு இலக்குகள் உள்ளன.

இரு கொரியாக்களுக்கு இடை­யில் மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது ஒன்று. அணுவாயுத களைவு விவகாரத்­ தில் அமெரிக்காவுக்கும் வடகொரி­யாவுக்கும் இடையில் நடுவராகச் செயல்படுவது என்பது மற்ற­ ஒன்று. இதில் கடந்த ஏப்ரல் மாதம் இரு கொரியத் தலைவர்கள் சந்­தித்ததே முக்கியமானதொரு நிகழ்­ வாக அமைந்துள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, அணு­வாயுத களைவு தொடர்பாக நடை­ முறைப்படுத்தக்கூடிய நடவடிக்கை­களை எடுப்பதில் அதிபர் மூன் முன்னேற்றம் காண்பார் என எதிர்­ பார்க்கப்படுகிறது.

பியோங்யாங் சென்றுள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு (இடது) வழிநெடுக வடகொரிய மக்கள் மலர்க்கொத்து ஏந்தி வரவேற்பு தெரிவித்தனர். உடன் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன். படம்: இபிஏ