கடந்த ஒரு வாரமாக கலிஃபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ என்றும் இல்லாத அளவுக்கு பேரழிவையும் பெரும் நாசத்தையும் ஏற்படுத்தி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டுத் தீக்கு பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ள நிலையில் சுமார் 7,000 வீடுகளும் இதர கட்டடங்களும் வாகனங்களும் தீயில் எரிந்து சாம்பலானதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். காட்டுத் தீ சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பேரடைஸ் நகரம் காட்டுத் தீ பரவுவதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் மட்டும் 200 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி
கலிஃபோர்னியாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத் தீ
1 mins read
-

