2022ல், 54% மருத்துவர்கள் பொதுத் துறையிலிருந்து விலகினர்: மலேசிய சுகாதார அமைச்சர்

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள 100,696 மருத்துவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அல்லது 54 விழுக்காட்டினர் 2022ல் பொதுச் சேவைத் துறையை விட்டு விலகியதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் தனியார் துறைக்குச் செல்ல விரும்பியதே அதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது.

பொதுச் சேவைத் துறையை விட்டு விலகிய மருத்துவர்களின் மொத்த எண்ணிக்கையில், 45 விழுக்காட்டினர் தற்போது வெளிநாடுகளில் வேலைசெய்கின்றனர் என்று தமது அமைச்சின் கருத்தாய்வு முடிவுகள் காட்டியதாக சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது நாடாளுமன்றத்தில் கூறினார்.

அதோடு 28 விழுக்காட்டினர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாகவும் அவர் தெரிவித்தார்.

மருத்துவர்கள் பொதுத் துறையில் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியதாக அமைச்சர் கூறினார்.

அதோடு, 2019ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையே 9,822 மருத்துவர்கள் நிரந்தரப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

குறிப்பிட்ட படிப்புகளுக்காக அரசாங்கம் சலுகைத் திட்டங்களையும் வழங்குவதாக டாக்டர் ஸுல்கிஃப்லி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!