பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸில் நேற்று முன்தினம் ஐஎஸ்ஐஎஸ் கொடி வரையப்பட்ட தாளுடனும் கத்தியுடனும் காவல் நிலையம் ஒன்றில் நுழைய முயன்றார். அவர் தற்கொலைத் தாக்குதல் நடத்துபவனைப் போன்ற ஆடையுடனும் கத்தியுடனும் காணப்பட்டார். அவரை போலிசார் சுட்டுக் கொன்றனர். அவர் அணிந்திருந்தது போலியான தற்கொலை ஆடை என்றும் அவர் வைத்திருந்த கத்தி, இறைச்சி வெட்டப் பயன்படும் கத்தி என்றும் பின்னர் தெரிய வந்தது. அவர் 2013ஆம் ஆண்டு ஒருமுறை திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டவர் என்றும் அவர் மொரோக்கோ அல்லது துனிசியா நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தக் காவல் நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
விழிப்புநிலையில் பாரிஸ் போலிஸ்
1 mins read
-

