பொம்மை கார் வாங்குவதற்காக தம் பெற்றோரின் காரை சகோதரனுடன் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தினான் ஆறு வயது சிறுவன் ஒருவன்.
மலேசியாவின் லங்காவித் தீவில் செவ்வாய்க்கிழமை (மே 9) இரவு அவன் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு காரை ஓட்டிச் சென்ற பிறகு, கட்டுப்பாட்டை இழந்த கார் விளக்குக் கம்பத்தில் மோதியது.
சிறுவனின் கன்னத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. மூன்று வயதான அவனது சகோதரன் காயமின்றித் தப்பினான்.
இச்சம்பவம் குறித்து லங்காவி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோருக்குத் தெரியாமல் சிறுவன் காரை ஓட்டினான் என்று காவல்துறை உதவி ஆணையர் ஷரிமான் தெரிவித்தார்.